திண்டுக்கல் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற கணவர் கைது!!

Read Time:2 Minute, 7 Second

7cd22bf5-35d7-4012-a6d3-008676e7a3cc_S_secvpfதிண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை கோட்டைக்கல்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(30). இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி(24). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பால்ராஜ்(35).

ஆண்டிச்சாமி வீட்டில் இல்லாத சமயம் அவரது வீட்டிற்கு பால்ராஜ் சென்று வந்துள்ளார். இதில் பால்ராஜூக்கும், ஜெயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த விபரம் ஆண்டிச்சாமிக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்தார். இருந்தபோதும் இவர்கள் கள்ளக்காதலை நிறுத்தவில்லை.

நேற்று இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஆண்டிச்சாமி, வீட்டில் பால்ராஜூம், தனது மனைவியும் உல்லாசமாக இருப்பதை பார்த்தார். இதனால் அவருக்கு கோபம் தலைக்கேறியது. தான் மரம் வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து கொண்டு பால்ராஜை வெட்ட ஓடினார். ஆனால் அவர் தப்பிக்க முயன்றும், ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற ஆண்டிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனநலம் குன்றிய சிறுமியை குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைத்துக் கொலை?
Next post பேஸ்புக்கில் குவிந்த வாழ்த்து: மகிழ்ச்சியில் தத்தளித்த ஆட்டிஸம் பாதித்த சிறுவன் (வீடியோ இணைப்பு)!!