மோடி அரசாங்கத்தை பிரிந்தார் வைகோ!!
Read Time:1 Minute, 13 Second
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அக்கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் பேசிய வைகோ இதைத் தெரிவத்தார். இலங்கை அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு நட்பு பாராட்டுவதற்கும் வைகோ கண்டனம் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மோடி அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருவதாக வைகோ குற்றம்சாட்டினார். கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என மதிமுக உயர்நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதி வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
Average Rating