காட்பாடி அருகே கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசோதனை!!
Read Time:1 Minute, 9 Second
திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட காட்பாடி அடுத்த சேனூர் பகுதியில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.
சுகாதார மாவட்ட துணை இயக்குனர் தேவ.பார்த்தசாரதி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம், சுகர், உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சாட்சரம், திருவலம் வட்டார மருத்துவ அலுவலர் ரெபேக்கா தேன்மொழி, சேனூர் மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா, சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி, ஆய்வாளர்கள் ராஜ்குமார், ரமேஷ்பாபு உள்பட நர்சுகள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Average Rating