திருவள்ளூர் அருகே காப்பகத்தில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை: நிர்வாகி கைது!!
Read Time:1 Minute, 17 Second
திருவள்ளூரை அடுத்த அரண்வாயலில் ஆதரவற்ற மாணவ–மாணவிகள் தங்கி படிக்கும் தனியார் காப்பகம் உள்ளது. 57 பேர் இங்கு தங்கி இருந்தனர்.
அதே பகுதியை சேர்ந்த விஜயன் காப்பகத்தை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் காப்பகத்தில் இருந்த 8–ம் வகுப்பு மாணவியை உறவினர் சந்திக்க வந்தனர். அப்போது மாணவி, காப்பக நிர்வாகி விஜயன் தன்னிடம் செக்ஸ் தொல்லையில் ஈடுபட்டதாக கூறி கதறி அழுதார்.
இது குறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து காப்பக நிர்வாகி விஜயனை கைது செய்தார்.
இதை தொடர்ந்து காப்பகத்தில் இருந்த மாணவ– மாணவிகள் அனைவரும் கசவா நல்லாத்தூரில் உள்ள மற்றொரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Average Rating