முத்த போராட்டம் ஒழுக்கக்கேடான செயல்: கேரள ஐகோர்ட்டு கருத்து!!
Read Time:57 Second
கேரள மாநிலத்தில் சமீபத்தில் ‘கிஸ் ஆப் லவ்’ என்ற பெயரில் சில அமைப்புகள் முத்த போராட்டம் நடத்தின. இந்நிலையில், முத்த போராட்டம், ஒழுக்கக்கேடான செயல் என்று கேரள ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
முத்த போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதான யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி கமால் பாட்சா இதை தெரிவித்தார். கலாசாரத்தை பாதுகாக்கும் போர்வையில், ரவுடிகள் நிகழ்த்தும் வன்முறைகள்தான், முத்த போராட்டத்துக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார்.
Average Rating