உத்திரப்பிரதேசத்தில் பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது- கிளீனர் தலைமறைவு!!
Read Time:1 Minute, 13 Second
உத்திரப்பிரதேச மாநிலம், பல்லியா நகரில் உள்ள சஹத்வர் பகுதியில் டெம்போ டிரைவரும் உதவியாளரும் சேர்ந்து 25 வயதான பெண்ணைக் கற்பழித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
சம்பவம் நடந்த சனி அன்று, அந்தப் பெண் தனது சகோதரியின் வீட்டிற்கு செல்லும் போது அவரை வழிமறித்த டெம்போ டிரைவர் ராகுல் யாதவ் மற்றும் அவரது உதவியாளர் லால்ஜி யாதவ் இருவரும் அந்தப் பெண்ணை கற்பழித்துள்ளது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் துறை, டிரைவர் ராகுல் யாதவை கைது செய்துள்ளதாகவும் மற்றொரு குற்றவாளியான லால்ஜியைக் கைது செய்ய தீவிர தேடுதலில் ஈடுபட்டுவருவதாகவும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோஸ்வாமி தெரிவித்தார்.
Average Rating