ஜேவிபி முக்கியஸ்தர் மீது தெனியாயவில் தாக்குதல்!!
மாத்தறை – தெனியாய என்சல்வத்த தோட்டத்தில் வேலை செய்யும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தெனியாய பிரதேச அமைப்பாளருமாகிய ஏ.டி.ஆரியதாச மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதகவும் தாக்குதலில் காயமடைந்த ஆரியதாச தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
ஆரியதாச தனது கடமை முடிந்து வந்தபோது ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எஸ்ரிஎப் என்று கூறிய நபர்கள் ஆரியதாசவின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி கை, கால்கள் மீது பொல்லுகளினால் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த ஆரியதாச தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை தெனியாய பொலிஸாரோ வைத்தியசாலை பொலிஸாரோ ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ள ராமலிங்கம் சந்திரசேகரன், தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Average Rating