30ம் திகதி தாதியர்கள் போராட்டம்!!
Read Time:1 Minute, 6 Second
சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 30ம் திகதி நாடுபூராகவும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் தாதியர்களின் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார்.
அது பற்றிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Average Rating