சிறிகொத்த தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பில்லை – விமல்!!
Read Time:1 Minute, 1 Second
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன் ஏற்பட்ட மோதலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அமைப்பாளர் ஒன்றியத்திற்கு தமது கட்சியுடன் தொடர்பில்லை எனவும் இதன்போது அவர் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் அவர்களின் செயற்பாடுகளில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் மட்டும் நான் அவற்றில் கலந்து கொள்வதுண்டு என விமல் வீரவங்ச இங்கு சுட்டிக்காட்டினார்.
Average Rating