புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடத்தபடவிருந்த 73,000 பென்டோர்ச பற்றரிகள் மீட்பு
Read Time:1 Minute, 10 Second
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்கு கொண்டு செல்வதற்காக வவுனியாவுக்கு எடுத்து வரப்பட்டிருந்த 73,000 பென்டோர்ச் பற்றிரிகளும், 50 கிலோ கிராம் எடை கொண்ட 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சைக்கிள் சன்னங்களும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களை வவுனியா- கொழும்பு தனியார் போக்குவரத்து லொறி(முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான லொறி) ஒன்றின் மூலம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வன்னிக்கு எடுத்து செல்லபட விருந்ததாகவும், கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரே இப் பொருட்களை கொழும்பில் கொள்வனவு செய்து அனுப்பி வைத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.