ஜோதிகாவை எச்சரித்த சூர்யா!!
பிரபல நடிகர் சூர்யாவின் மனையும் நடிகையுமான ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஜோதிகா ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், அதனால் ஒரு நாளுக்கு எடுக்க வேண்டிய மொத்த ஷாட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதனை அறிந்த சூர்யா, ஜோதிகாவுக்கு எச்சரிக்கை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதிக நேரம் எடுத்தால் பின்னர் தயாரிப்பு செலவு அதிகமாகும் என்று ஜோதிகாவுக்கு எடுத்து கூறி ஒவ்வொரு ஷாட்டுக்கும் தேவையான அளவு நேரத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு எச்சரித்துள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதைப்படி நாற்பது வயது பெண் ஒருவர் வாழ்வில் சிறப்பான வெற்றி பெற்றதால் அவருடைய கணவரின் கோபத்திற்கு ஆளாகி அதன்பின்னர் கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணின் கதை. இந்த கதை குறித்து ஜோதிகா அடிக்கடி தனது கணவர் சூர்யாவிடம் விவாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் ஜோதிகா நடிக்கும் வேடட்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating