ஏற்காட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மானப்பங்கப்படுத்த முயன்றதாக வாலிபர் கைது!!
சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சாந்தவள்ளி (38). மல்லூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
சம்பவத்தன்று நான் செம்மநத்தம் ஆற்றில் தனியாக துணி துவைத்து கொண்டு இருந்தேன். அங்கு வந்த ஆண்டி (31) என்பவர் என் வாயை பொத்தி என்னை கற்பழிக்க முயன்றார் என்றும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, பெண்ணை மானப்பங்கம் செய்ய முயன்றதாக ஆண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போல் ஆண்டியின் மனைவி ஏற்காடு போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
எனது கணவர் சம்பவத்தன்று ஆட்டுக்கு தழை அறுக்க சென்ற போது சாந்தவள்ளி துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது தண்ணீர் எனது கணவர் மீது பட்டது. இது தொடர்பாக என் கணவர் கேட்ட போது ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக அவர் திட்டினார். மேலும் அவருக்கு ஆதரவாக பொன்னுகும்பன், பவுன்ராஜ் உள்பட 3 பேர் வந்து என் கணவரை தாக்கினர்.
இதில் காயம் அடைந்த எனது கணவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார் என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Average Rating