குடும்பத்துடன் மயிரிழையில் உயிர்பிழைத்த நடிகை!!
ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடலில் படகு சவாரி செல்ல குடும்பத்தினர் ஆசைப்பட்டனர்.
இதையடுத்து பிரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும் ஒரு படகை வாடகைக்கு பிடிக்க அதில் ஏறினார்கள். படகு கடலில் சீறிப் பாய்ந்தது. அதில் உட்கார்ந்தபடி எல்லோரும் கடல் மற்றும் கடற்கரையோர அழகை இரசித்தபடி சென்று கொண்டு இருந்தனர்.
திடீரென அந்த படகு பவளப்பாறையொன்றில் பயங்கரமாக மோதியது. இதில் படகு உடைந்தது. எல்லோரும் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர். இதை பார்த்ததும் கடலோர காவல் படையினர் அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு விரைந்தனர்.
உடைந்த படகை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களை வேறு படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். இந்த விபத்தில் பிரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
Average Rating