யாகசாலையில் 3 வாலிபர்கள் இறந்த வழக்கில் திருப்பம்: 2 புரோகிதர்கள் மீது வழக்கு!!

Read Time:1 Minute, 39 Second

7cae3d64-c551-4828-a1ff-1149daa3fb62_S_secvpfஉத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் பாங்கி பிஹாரி கோவிலுக்கு அருகேயுள்ள யாகசாலையில் மர்மமான முறையில் மூன்று வாலிபர்கள் நேற்று இறந்து கிடந்தனர்.

இறந்தவர்கள் மூவரும் ஆகாஷ், கல்யாண், மனோஜ் என்பது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இறந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லையென்றும் மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

ஆலய உதவியாளர்களாக இருந்த மூவரும் யாகசாலையில் தூங்கியபோது மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என கோவிலில் உள்ள புரோகிதர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மூவர் கொலை வழக்கில் கொலை மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆனந்த் கிஷோர் கோஸ்வாமி மற்றும் ஜீகல் கிஷோர் கோஸ்வாமி என்ற இரண்டு புரோகிதர்கள் மீது விருந்தாவன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் வேடத்தில் அனுஷ்கா!!
Next post குடும்பத்துடன் மயிரிழையில் உயிர்பிழைத்த நடிகை!!