சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான விசாரணையில் அரசியல் அழுத்தங்கள் ஏதுமில்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!!
மத்திய முன்னாள் மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இது தொடர்பாக சசி தரூரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் டெல்லி போலீசை வைத்து மிரட்டி வருவதாகவும், எவ்வித விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாகவும், அந்த விசாரணை நியாயமாகவும், விரைவாகவும் நடத்தப்பட வேண்டும் எனவும் சசி தரூர் கூறி வருகிறார்.
இந்நிலையில், சசி தரூரின் குற்றச்சாட்டு தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ‘இந்த விசாரணையில் உள்நோக்கமோ, அரசியல் அழுத்தமோ ஏதுமில்லை. நாங்கள் எவ்வித அழுத்தத்தையும் போலீசாருக்கு கொடுக்கவில்லை.
டெல்லி போலீசாரும் விருப்பு-வெறுப்பற்ற முறையில் தான் இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர்’ என்று கூறியுள்ளார்.
Average Rating