தொடரும் பன்றிக்காய்ச்சல்: ராஜஸ்தானில் ஒரே நாளில் 2 பெண்கள் பலி!!
Read Time:1 Minute, 14 Second
ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் இரண்டு பெண்கள் பலியானதாக மருத்துவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் சில வாரங்களாகவே பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பிகானர் மாவட்டத்தின் ஜவாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 32 வயது பெண் ஒருவர் நேற்று பலியானதாக மாவட்ட மூத்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
இதே போல் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த 28 வயதான பெண்ணும் பன்றிக் காய்ச்சலால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன்மூலம் ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating