செய்யாறில் வாலிபரை காரில் ஏற்றி அடித்து உதைத்து செல்போன், பணம் பறிப்பு: 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு!!

Read Time:1 Minute, 53 Second

23ca1639-a0b7-4432-85db-c2739e894370_S_secvpfசெய்யாறு பஸ் நிலையத்தில் நின்றிருந்தவரை காரில் அழைத்து செல்போன், பணம் பறித்த 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்யாறு அடுத்த குன்னத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சுகுமார் (வயது18). இவர் காணும் பொங்கலையொட்டி சேராம்பட்டு கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்புவதற்காக செய்யாறு பஸ்நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சுகுமாரை பார்த்து, நாங்களும் உன் ஜாதிதான். காரில் வந்தால் உங்கள் ஊரில் இறக்கி விட்டு விடுகிறோம் எனக்கூறி அவரை காரில் ஏற்றினர்.

கார் சிறிது தூரம் சென்றபோது காரில் வந்த 6 பேரும் சுகுமாரை அடித்து உதைத்தனர். அவரிடமிருந்த செல்போன், பாக்கெட்டில் இருந்த ரூ.300-ஐ பறித்துக் கொண்டனர். பின்னர் வெங்கட்ராயன் பேட்டை புளியந்தோப்பு அருகே காரை நிறுத்திவிட்டு சுகுமாரை, கடையில் சென்று சிகரெட் வாங்கி வா எனக்கூறி இறக்கிவிட்டனர். ஆனால் சுகுமார் அவர்களிடமிருந்து நைசாக தப்பி சென்று செய்யாறு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சுகுமாரிடம் பணத்தை பறித்த 6 பேரையும் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தானாக தீப்பற்றி எரியும் குழந்தையின் தாய்க்கு தீவிர மருத்துவ பரிசோதனை: டாக்டர்கள் முடிவு!!
Next post 2 சிறுமியிடம் சில்மிஷம்: 68 வயது முதியவர் கைது!!