விருத்தாசலம் அருகே இளம்பெண் கடத்தல்: வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு!!

Read Time:1 Minute, 36 Second

3743306d-6538-4fcd-b5f6-06abc8455a60_S_secvpfவிருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சந்தியா (வயது 15).

கடந்த மாதம் சந்தியா ‘திடீர்’ மாயமாகிவிட்டார். இதுபற்றி விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் மறுநாளே விருத்தாசலம் போலீசில் சந்தியா சரணடைந்தார். பின்னர் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தநிலையில் டிசம்பர் 28–ந்தேதி சந்தியா மீண்டும் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் பல இடங்களில் தேடியும் மகளை காணவில்லை. ஆனால் சந்தியா கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதனால் திடுக்கிட்ட சக்திவேல் இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மணிவாசகத்திடம் கேட்டார். உடனே ஆத்திரமடைந்த மணிவாசகம் மற்றும் அவரது தரப்பினர் சிலர் சேர்ந்து சக்திவேலை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த சக்திவேல் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மணிவாசகம், அவரது பெற்றோர் கண்ணன்– அங்கம்மாள், நண்பர் சிவகுமார் ஆகியோர் மீது சப்– இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மேஸ்திரி சாவு: பிணத்தை வாங்க மறுத்து போராட்டம்– தடியடி!!
Next post தியாகதுருகத்தில் வீடுகளில் கூட்டமாக புகுந்து சூறையாடும் குரங்கு கூட்டம்: 2 மாதத்தில் 50 பேரை கடித்தது!!