மன்னார்குடி அருகே 9 வயது சிறுமி பலாத்காரம்!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தச்சன் வயலில் நேற்று காணும் பொங்கல் விழாவையொட்டி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை கிராம மக்கள் திரளாக கண்டு மகிழ்ந்தனர்.
அங்கு 9 வயது சிறுமி ஒருவர் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கலைவாணன் (வயது 35) என்பவர் வந்தார். அவர் சிறுமியை அவரது தந்தை அழைத்ததாக கூறினார். அதனை நம்பி அவருடன் சென்ற சிறுமியை அவர் மறைவான இடத்துக்கு தூக்கி சென்று வாயில் துணியை திணித்து சிறுமி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி தனது வீட்டுக்கு சென்று வாலிபரின் கொடுஞ்செயல் குறித்து கூறினார்.
இதுபற்றி சிறுமியின் தந்தை திருமாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி 4–ம் வகுப்பு மாணவி ஆவார்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating