கோபி அருகே ஸ்கூட்டரில் சென்ற நர்சிடம் 10 பவுன் நகை கொள்ளை: 2 வாலிபர்கள் கைவரிசை!!

Read Time:2 Minute, 26 Second

2e49cf76-ef22-4fd9-a67f-c2386ffb0383_S_secvpfகோபி அடுத்த கடத்தூர் பள்ளிக்கூட பிரிவு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி லீலாதேவி (வயது 45). இவர் சுண்டக்காம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

லீலாதேவியின் அக்காள் உடல்நலக்குறைவு காரணமாக உக்கரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இதனால் அக்காவை பார்ப்பதற்காக நேற்று மாலை 5 மணிக்கு தனது ஸ்கூட்டரில் லீலாதேவி சென்று கொண்டிருந்தார்.

உக்கரம் செல்லும் ரோட்டில் திட்டாம் பாளையம் என்ற இடத்தில் லீலாதேவி சென்று கொண் டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், ஸ்கூட்டரில் சென்ற லீலாதேவியிடம் உக்கரம் பகுதிக்கு எப்படி செல்ல வேண்டும்? என்று கேட்டனர்.

இதனால் லீலாதேவி ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி அந்த வாலிபர்களிடம், பேசினார்.

அப்போது ஒரு வாலிபர், லீலாதேவி கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி செயினை பறித்தார். உடனே லீலாதேவி திருடன்… திருடன்.. என்று கூச்சல் போட்டார்.

இதனால் சுதாரித்து கொண்ட 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு தப்பி சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி கடத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கோபி போலீஸ் டி.எஸ்.பி. முருகன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விவேகானந்தன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கூட்டரில் சென்ற நர்சிடம் 10 பவுன் நகையை வாலிபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6 வருடமாக காதலித்து விட்டு ஏமாற்ற முயற்சி: போலீசார் சமரசத்தால் காதலியை கரம் பிடித்த ராணுவ வீரர்!!
Next post புலிக்காக 260 தங்க நாணயம் வழங்கிய விஜய்!!