காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மதுரை ஆசிரியை தற்கொலை முயற்சி!!
மதுரை அருகே எஸ்.கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கவிதா (வயது29). மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் புகழேந்தி (32) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
கவிதா, திருமணத்துக்கு தயாராக இருந்தபோதும், புகழேந்தி அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இந்த நிலையில் நேற்று பரமக்குடி வந்த கவிதா, புகழேந்தியை அழைத்து திருமணம் சம்பந்தமாக பேசி உள்ளார்.
அப்போது போலீஸ்காரர் புகழேந்தி, ‘‘உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது அக்காள் மகளை திருமணம் செய்ய போகிறேன். நீ வேறு இடத்தில் திருமணம் செய்து கொள்’’ என்று கூறினாராம்.
இதனால் மனம் உடைந்த கவிதா, பரமக்குடி பஸ் நிலையத்தில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சகாயராணி மற்றும் போலீசார், கவிதாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது கவிதா போலீஸ்காரர் புகழேந்தி தன்னை ஏமாற்றிய தகவலை தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating