வாணியம்பாடி அருகே கணவர் வீட்டு முன்பு 3வது நாளாக மனைவி தர்ணா!!
வாணியம்பாடி தாலுகா திம்மாம்பேட்டை அடுத்த திக்குவாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, இவரது மகள் துர்கா (21) இவரும் வாணியம்பாடி அடுத்த வெப்பலாம்பட்டியை சேர்ந்த சதீஷ் (23) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் துர்கா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சதீஷிடம் கேட்டார். அதற்கு வெளிநாடு சென்று வேலை செய்வதே என் லட்சியம. அதன்பிறகே திருமணம் எனக்கூறி, திருமண பேச்சுக்கு சதீஷ் முற்றுப்புள்ளி வைத்தார். இதை துர்கா ஏற்க மறுத்ததால் அவர்களுக்குள் சண்டை நீண்டது.
இதுகுறித்து வாணியம்பாடி மகளிர் போலீசில் துர்கா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார் இருவரையும் சமரசம் செய்து வைத்து திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினர்.
அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி சதீஷ்–துர்கா திருமணம் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு சதீஷ் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த துர்கா மீண்டும் மகளிர் போலீஸ் உதவியை நாடினார்.
இதை தொடர்ந்து சதீஷிடம் விசாரணை நடத்த மகளிர் போலீசார் முயன்ற போது அவர் வெளியூர் சென்று விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே துர்கா கர்ப்பமானார் இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியூர் சென்ற சதீஷ் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதை அறிந்த துர்கா சதீஷிடம் கேட்க சென்ற போது கணவர் குடும்பத்தார் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த துர்கா நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில ஈடுபட்டார். நேற்று போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் போராட்டத்தில ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் வந்ததும் வாணியம்பாடி மகளிர் போலீசார் துர்காவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating