2 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்து வைத்து சிறுமி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் பெற்றோருடன் கைது!!
ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை திருமண ஆசைகாட்டி அழைத்து சென்று, வீட்டு வேலைக்காரியாக மாற்றி, கடந்த இரண்டாண்டுகளாக பலவந்தம் செய்து கற்பழித்த பட்டதாரி வாலிபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள கண்டமால் மாவட்டத்தை சேர்ந்தவர் கோலாக்கா பிஹாரி டிகல்(27). பொறியியல் துறை டிப்ளமோ பட்டதாரியான இவர், ஒரு சிறுமியை திருமண ஆசைகாட்டி மயக்கி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
டிகலின் பெற்றோர் அந்த பெண்னை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக பயன்படுத்திக்கொண்டனர். பெற்றோரின் ஒத்துழைப்புடன் அவளை கோலாக்கா பிஹாரி டிகல் ’செக்ஸ் அடிமையாக’ பயன்படுத்திக்கொண்டார்.
அந்த குடும்பத்தில் இரண்டு ஆண்டுகளாக சிக்கிக்கொண்டு தாங்க முடியாத கொடுமையை அனுபவித்து வந்த சிறுமியின் துயர நிலைமையை அறிந்த தொண்டு நிறுவனத்தார், அவர்களின் பிடியில் இருந்து சிறுமியை கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி மீட்டு அழைத்துவந்து ஒரு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
தனக்கு நேர்ந்த அனுபவங்களை எல்லாம் நீண்டதொரு கடிதமாக எழுதிய சிறுமி, அதனை போலீசாருக்கு பதிவு தபாலில் அனுப்பி வைத்தார். இதனையடுத்து, அந்த கடிதத்தையே புகாராக பதிவு செய்த போலீசார், கந்தமால் மாவட்டத்தில் உள்ள டெங்கபாதாரா பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு வசித்துவரும் கோலாக்கா பிஹாரி டிகல், அவரது தந்தை பிரசாந்த் டிகல், அரசு ஊழியராக பணிபுரியும் தாய் சுபாஷினி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரை இரண்டாண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த கோலாக்கா பிஹாரி டிகலையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Average Rating