திருமணம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது!!

Read Time:1 Minute, 37 Second

0a6c4b5d-5df0-4eed-bd6f-0c99d3dc1cb8_S_secvpfதிருக்கழுக்குன்றத்தை அடுத்த திம்மூர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் கல்லூரிக்கு செல்லும் போது திம்மூரை சேர்ந்த 11–ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரே ஊர் என்பதால் அவர்களது நெருக்கம் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில் மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுரேஷ் பல முறை உல்லாசமாக இருந்தார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

இதற்கிடையே வீட்டில் இருந்த போது திடீரென மாணவி மயக்கம் அடைந்தார். அவரை பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதும், ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவர் சுரேஷ் ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். மாணவர் சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த்ரிஷா – வருண் நிச்சயதார்த்தம்!!
Next post செக்ஸ் புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் பணியில் சேர்ந்தார்: பொதுமக்கள் நல்லவர் என சிபாரிசு!!