கண்ணை மறைத்த மதுபோதை: 2 வயது மகளை பலாத்காரம் செய்த தொழிலாளி!!

Read Time:2 Minute, 3 Second

79719304-981e-4e65-a979-ef481b440ce1_S_secvpfதிருப்பூர் மாவட்டம் பள்ள பாளையத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 2 வயதில் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். கோதண்டராமனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார்.

சம்பவத்தன்று கோதண்டராமன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். வீட்டில் சித்ரா விளையாடிக் கொண்டிருந்தார். போதையிலிருந்த கோதண்டராமன் மகளை பார்த்ததும் காமபோதை தலைக்கேறியது.

மகள் என்று பாராமல் சித்ராவை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சித்ரா மயக்கமடைந்தார். அப்போது வீட்டுக்கு வந்த மல்லிகா மகளின் நிலைமையை கண்டு அதிர்ச்சியடைந்தார். போதையிலிருந்த கோதண்டராமனை சரமாரியாக தாக்கினார்.

பின்னர் மயக்க நிலையில் இருந்த மகளை அருகேயிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் மல்லிகா ஆனைமலையில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்தார். அங்கு பெற்றோர் உதவியுடன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

டாக்டர்கள் சிறுமி சித்ராவுக்கு தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். இதுகுறித்து மல்லிகா மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓசூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை கடத்த வந்த காதலன் விஷம் குடித்தார்!!
Next post த்ரிஷா – வருண் நிச்சயதார்த்தம்!!