ஆம்பூரில் புதுப்பெண் தற்கொலை: கல்லூரி மாணவியை மணந்தார் மணமகன்!!

Read Time:1 Minute, 59 Second

4f1aca81-d459-44ae-a848-ae9e32c4931f_S_secvpfஆம்பூர் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் வீரராகவன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 23). ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆம்பூர் நாச்சார் குப்பத்தை சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 19–ந்தேதி மாலை திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நடக்க 4 நாட்களே உள்ள நிலையில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து நிச்சயித்த நாளிலேயே நடராஜனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகள் நித்யாவுடன் திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது. நித்யா வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.

நடராஜனுக்கு ஏற்கனவே தேதி குறித்தபடி இன்று நித்யாவுடன் திருமணம் நடந்தது.

புதுப்பெண் இறந்ததால் கேள்விக்குறியான நடராஜன் திருமணம் வேறு பெண்ணுடன் நடந்து முடிந்ததால் அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வாழ்த்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடையாறில் கழுத்தை அறுத்து திருநங்கை தற்கொலை முயற்சி!!
Next post ஓசூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை கடத்த வந்த காதலன் விஷம் குடித்தார்!!