சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 70 வயது முதியவர் கைது!!

Read Time:1 Minute, 33 Second

5fc4762a-eef1-4915-b1fc-33aaf1b31b86_S_secvpfசேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள கா.புதூர், காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). இவர் மாடுகளை வளர்த்து அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1–ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமிக்கு இன்று விடுமுறை என்பதால் பள்ளியின் விடுதி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த முதியவர் பெரியசாமி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

தற்செயலாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இந்த சம்பவத்தை பார்த்து விட்டனர். அவர்கள் முதியவர் பெரியசாமியை தப்பவிடாமல் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து எடப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொட்டால் தொடரும்!!
Next post சேலம் மாநகராட்சி புதிய கட்டிடத்தில் கான்கிரீட் விழுந்து தொழிலாளி பலி!!