தஞ்சையில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை!!

Read Time:3 Minute, 40 Second

f99fe238-1d04-4acf-a21b-4dd3249950b2_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் காஞ்சனா (39). இவரது கணவர் ஆனந்த மூர்த்தி. சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர். இருவரும் டாக்டர்கள்.

மருத்துவ படிப்பு படிக்கும் போது 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மருத்துவ முதுகலை படிப்பு படிக்க ஆனந்த மூர்த்தி கோவை சென்றார்.

காஞ்சனா தஞ்சைக்கு வந்தார். அவர் இங்குள்ள மல்லிகை நகர் விரிவாக்கம் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் வாடகைக்கு குடியேறினார். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ முதுகலை படிப்பு படித்து வந்தார்.

இவர்களுக்கு இரட்டையர்களான ஆகாஷ் (15), அஜிஸ் (15) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருச்சி சமயபுரத்தில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

வாரத்திற்கு ஒரு நாள் காஞ்சனா தனது மகன்களை பார்க்க திருச்சி செல்வது வழக்கம். நேற்று அவர் தனது மகன்களை பார்க்க செல்ல தனது கார் டிரைவர் மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரை சேர்ந்த ராஜா கிருஷ்ணனை வர சொல்லி இருந்தார்.

அதன்படி கார் டிரைவரும் வந்தார். அப்போது வீடு உள் பக்கம் பூட்டி கிடந்தது. பெண் டாக்டரின் செல்போனுக்கு டிரைவர் தொடர்பு கொண்டார். ஆனால் காஞ்சனா போனை எடுத்து பேசவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் மாடியில் வசித்து வரும் வீட்டு உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். அவர்களும் கீழே வந்து சத்தம் போட்டனர். வீட்டிற்குள் இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.

பின்னர் அப்பகுதியை சேர்ந்த சிலர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது காஞ்சனா மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தாஸ், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜம்புலிங்கம், லாரன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் தற்கொலை செய்து கொண்ட காஞ்சனாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சனா கடிதம் எதுவும் எழுதி வைத்து இருக்கிறாரா? என வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நண்பர் இறந்த நாளிலேயே கல்லூரி மாணவர் தற்கொலை!!
Next post ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!!