உ.பி.யில் 5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன் கைது!!
Read Time:1 Minute, 19 Second
உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தீ பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவளது உறவுக்கார சிறுவன் அந்த குழந்தையை தனிமையான பகுதிக்கு தூக்கிச் சென்று கற்பழித்ததாக, அவளது பெற்றோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 17 வயது சிறுவனையும் அவனது தந்தையையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்று குழந்தையின் பெற்றோரை மிரட்டியதால் சிறுவனின் தந்தையையும், மாமாவையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating