பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து விதவை பெண் கற்பழிப்பு: கூலித்தொழிலாளி கைது!!
பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம் பட்டியை சேர்ந்தவர் நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது. வயது 37). இவரது கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மகளை பள்ளி ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். இவருடன் ஒரு மகன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நித்யாவை அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான திருமூர்த்தி (44) அடைய ஆசைப்பட்டார்.
அவரிடம் தனது ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கு நித்யா உடன்படவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு யாரும் இல்லாத போது நித்யாவின் வீட்டுக்குள் திருமூர்த்தி புகுந்தார்.
அங்கு தூங்கிக்கொண்டிருந்த நித்யாவை எழுப்பினார். வீட்டுக்குள் திருமூர்த்தி நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை வெளியே செல்லும்படி நித்யா எச்சரித்தார். ஆனால் காமவெறியில் இருந்த திருமூர்த்தி வலுக்கட்டாயமாக நித்யாவை கற்பழித்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடினார்.
மயக்கமடைந்த நித்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்று காலை மாக்கினாம் பட்டியில் பதுங்கியிருந்த திருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating