சிங்கம்புணரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு: கணவர் மீது புகார்!!

Read Time:1 Minute, 29 Second

e076dec1-d0d9-49c2-881f-cc8659b76ed2_S_secvpfசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்துள்ள எஸ்.வி.மங்கலம் ஊரணிக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மல்லிகா (வயது25). இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்–மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்றும் இவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது.

இந்த நிலையில் மல்லிகா மர்மமான முறையில் இறந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெருமாள் கூறினார்.

ஆனால் தனது மகள் மல்லிகா தற்கொலை செய்திருக்க மாட்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என அவரது தந்தை மச்சக்காளை எஸ்.வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமாக 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. சிதம்பரம், போலீஸ் டி.எஸ்.பி. முருகன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பரங்கிமலையில் பஸ் பயணிகளிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது!!
Next post படிக்கவில்லையென்று அதிகாரிகளுடன் வாக்குவாதம்: திருமணத்தை தடுத்ததால் ஆவேசமடைந்த மாணவி!!