குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணிடம் நகை திருட்டு!!

Read Time:1 Minute, 28 Second

aac3ab64-7eeb-426e-8069-3cfe25f50a53_S_secvpfபழைய பல்லாவரம் செட்டித்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி உஷா. இவர் நேற்று மதியம் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அவரது உடலை உறவினர்களிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஒப்படைத்தனர். அப்போது உஷா அணிந்திருந்த 3½ பவுன் நகையை காணவில்லை.

இது குறித்து உஷாவின் உறவினர் குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணிடம் நகை திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில், விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் பணம் மற்றும் நகை அடிக்கடி மாயமாவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னை அறிந்தால் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை கண்டு கண்கலங்கிய அருண் விஜய்!!
Next post உடுமலையில் தன்னுடைய திருமணத்தை தானே நிறுத்திய கல்லூரி மாணவி!!