கோயம்பேட்டில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: நேபாள வாலிபர் கைது!!
நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம்பகதூர். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரேம்பகதூர் கோயம் பேடு சேமாந்தம்மன் நகரில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் குடும்பத்துடன் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவர்களின் உறவினர் குமார்பகதூர் (30).
இவரும் பிரேம்பகதூர் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். உறவினர் என்பதால் அவரையும் அன்புடன் கவனித்துக் கொண்டனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு குமார்பகதூர், தனது 10 வயது மகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கோயம்பேடு போலீசில் பார்வதி புகார் செய்தார். இதை அறிந்ததும் வாலிபர் குமார்பகதூர் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகுமார் வழக்குப்பதிவு செய்து குமார்பகதூரை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் அருகே கைது செய்தார். பின்னர் அவர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் மகளிர் காவல் நிலைய பெண் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனி விசாரணை நடத்தி வந்தார். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து நேபாள வாலிபர் குமார் பகதூர் மீது சிறுமியை கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள். மேலும் விசாரணை நடக்கிறது.
Average Rating