சிறுமியைக் கிண்டல் செய்த 10 வயது சிறுவன் கைது!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத்தில் சிறுமியை கிண்டல் செய்தாக போலீசார் 10 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
அந்த சிறுவன், பள்ளியில் படிக்கும் சிறுமியை அவளது பள்ளிக்கு வெளியே காத்திருந்து கிண்டல் செய்துள்ளான். இது முதல் முறை அல்ல நீண்ட காலமாக இப்படி நடந்து கொண்டுள்ளான். தொடக்கத்தில் இவனை அந்தச் சிறுமியின் பெற்றோர் கண்டித்தனர்.
இருந்தும், அவனது நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. சிறுமியைக் கிண்டல் செய்வதை அவன் தொடரவே இதற்கு மேலும் பொறுக்கு முடியாது என்று முடிவு செய்த சிறுமியின் பெற்றோர் அந்த சிறுவன் மீது காவல் துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று பாடவுட் மாவட்டத்தில் காவல்துறையினர் சிறுவனைக் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளி மட்டுமின்றி மற்ற பள்ளிகளுக்கும் சென்று அங்குள்ள சிறுமிகளையும் கிண்டல் செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating