மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!!

Read Time:1 Minute, 16 Second

31662cb3-ddaa-4df9-885f-344bc5d73498_S_secvpfமும்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சில தினங்களுக்கு முன், வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் ஆபாச படம் காட்டுவதாக மாணவி ஒருவர் தன் தந்தையிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை உதவிக்காக அணுகி, அவர் மூலமாக போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், 35 வயதான அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அவர் தன் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டியதாகவும் அதை பார்க்காதவர்களை தேர்வில் பெயிலாக்கி விடுவதாக மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஐந்து வருடமாக அப்பள்ளியில் பணியாற்றி வந்த அந்த ஆசிரியரிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குஜராத்தில் 15–ந்தேதி திறப்புவிழா: எனக்கு கோவிலா?- மோடி எதிர்ப்பு!!
Next post முதல் மனைவிக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்த வாலிபர் கைது!!