மீண்டும் மறுபிறவி எடுத்த பூனையின் கதை…!!
Read Time:1 Minute, 11 Second
அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் தம்பா பே என்ற இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் பூனை ஒன்று கார் விபத்தில் சிக்கியது. படுகாயம் அடைந்து மயங்கிய அந்த பூனை இறந்துவிட்டதாகக் கருதி அதன் உரிமையாளர் அதனை புதைத்துவிட்டார்.
ஆனால் 5 நாட்கள் கழித்து அந்த பூனை, புதைகுழியில் இருந்து உயிரோடு எழுந்து வந்தது. பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பூனை பூரண குணம் அடைந்தது. இந்த தகவல் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது அந்த பூனையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர் கோரிக்கை விடுத்து இருக்கிறார். பூனையை ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிறுவனம் பூனையை கொடுக்க மறுக்கிறது. விவகாரம் இப்போது கோர்ட்டுக்கு போய் இருக்கிறது.
Average Rating