உ.பி: பாலியல் துன்புறுத்தலை எதிர்த்த சிறுமி சுட்டுக்கொலை!!
உத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள சம்மதிக்காத 14 வயது சிறுமியை இரண்டு வாலிபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு, சிர்சா கிராமத்தின் அலிகன்ஜ் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து அந்த சிறுமி வெளியே சென்றிருந்த போது அருகிலுள்ள பச்சேந்தர் கிராமத்தை சேர்ந்த ரவீந்திரா மற்றும் ஓம்வீர் இருவரும் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இதை எதிர்த்து அந்த சிறுமி சத்தமிட்டதால் தங்கள் கையில் இருந்த துப்பாக்கியால் சிறுமியை சுட்டுக்கொன்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே அச்சிறுமி பரிதாபமாக பலியானாள்.
சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு வந்த கிராம மக்கள் ஒம்வீரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பிச்சென்ற ரவீந்திராவை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Average Rating