மலைக்கோட்டையில் காதலர் தினமான இன்று விஷ ஊசி போட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி!!
Read Time:1 Minute, 7 Second
திருச்சி மலைக்கோட்டை தேவதானம் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவரது மகள் சுகாசினி (வயது18). இவர் இன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்திய போது ஊசி மூலம் விஷத்தை உடம்பில் ஏற்றி அவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. மேலும் காதலர் தினமான இன்று அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் அவர் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating