தேனாம்பேட்டையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!
Read Time:44 Second
தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி சுமதி (25). இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள அப்பா சாமி தெரு வழியாக சென்றனர். அப்போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து சுமதி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
Average Rating