கேரளாவில் பெண்களிடம் நகை பறித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது!!
Read Time:1 Minute, 19 Second
கேரள மாநிலம் பாற சாலையை அடுத்த உதயன் குளக்கரை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
இது தொடர்பாக பாற சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஷைஜு (வயது 24) என்பவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஷைஜு சப்–இன்ஸ்பெக்டராக தேர்வாகி இருப்பதாக கூறி வழிப்பறி மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பனங்காட்டு குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்தர் பாய், ஞாறாங்காலை பகுதியைச் சேர்ந்த பங்கஜாக்ஷி ஆகியோரிடம் நகை பறித்ததும், தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்ததையும் ஷைஜு ஒப்புக் கொண்டார்.
அவரை பாறசாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சூரியகுமார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தார்.
Average Rating