ரஜினிக்கு மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்?
ரஜினி-ஷங்கர் கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலிலும் பிரம்மாண்டமான சாதனையை படைத்தது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
இந்நிலையில், எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரஜினியையே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.
இதுகுறித்து, தற்போது இருவருமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். முதல்பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருப்பதால் இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க திட்டமிருந்தார் ஷங்கர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருப்பதால், அவரையே மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக்கலாம் என முடிவு செய்துள்ளாராம்.
மேலும், இந்த படத்தை இந்தியிலும் பெரிய அளவில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதற்காக, பாலிவுட் நடிகர் அமீர்கானை இன்னொரு ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சியும் நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating