வெளிநாட்டு போராளிகளின் பிள்ளைகளுக்காக ஆங்கில பாடசாலைகளை திறக்கும் ஐ.எஸ்.!!
Read Time:1 Minute, 4 Second
ஐ.எஸ். போராளி, குழு தனது குழுவில் இணைந்து கொண்டுள்ள வெளிநாட்டு போராளிகளின் பிள்ளைகளுக்கான முதல் இரு ஆங்கிலப் பாடசாலைகளை தனது பிராந்திய தலைநகரில் திறந்து வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ். போராளி குழுவில் இணைந்து கொள்ளும் முகமாக 3 பிரித்தானிய மாணவிகள் சிரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
போராளிகளால் சிரிய ரக்கா நகரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
Average Rating