செய்யாறு அருகே மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்ற வாலிபர்!!
Read Time:57 Second
செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (70). இவரது மகள் சந்திரா(35). நேற்று மதியம் அங்குள்ள ஏரிக்கரையில் சந்திரா மாடு மேய்த்து கொண்டிருந்தார். நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை அழைப்பதற்காக சரோஜா ஏரிக்கரைக்கு சென்றார்.
அப்போது அங்கு மர்ம நபர் ஒருவர் மூதாட்டி சரோஜாவை வழிமறித்து கம்மலை கழற்றி தரும்படி கூறினார். அவர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர் காதோடு சேர்த்து மூதாட்டியின் கம்மலை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.
இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Average Rating