இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்!!
Read Time:1 Minute, 15 Second
காசிமேடு பெரியபாளையத்தம்மன் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ரீட்டா (50). பெருமாள் தனது தங்கை மகள் வசந்தியை (23) வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். வசந்தி மனவளர்ச்சி குன்றியவர். வாய் பேச முடியாது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வசந்தி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காசிமேடு பல்லவன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் விஜயன் (34) என்பவர் வசந்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதுபற்றி ரீட்டா ராயப்புரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி வழக்குப் பதிவு செய்து விஜயனை கைது செய்தார்.
இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜெயவேல், குற்றவாளி விஜயனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்த்து கூறினார்.
Average Rating