கேரளாவில் மாடல் அழகிகளுக்கு போதை மருந்து சப்ளை: நைஜீரிய நாட்டு வாலிபர் கைது!!
கேரளாவைச் சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் மாடல் அழகிகளுக்கு ஒரு கும்பல் போதை மருந்து சப்ளை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றதால் போலீசார் இதுபற்றி ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் போதை மருந்து அருந்தி விட்டு சிலர் ஆட்டம் பாட்டத்துடன் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது போதையில் இருந்த நடிகர் ஷைன் டோம் சாக்கோ, சினிமா துணை இயக்குனர் பிளஸ்ஷி மற்றும் சில மாடல் அழகிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த கும்பலை கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள்.
அப்போது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒக்காவே சிகோசி காலின்ஸ் (வயது 29) என்ற வாலிபர் போதை மருந்து சப்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கோவாவில் பதுங்கி இருந்த ஒக்காவே சிகோசி காலின்சை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் போதை மருந்து சப்ளைக்கு மாடல் அழகி ரேஷ்மா உதவியாக செயல்பட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஒக்காவே சிகோசி காலின்ஸ் எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அப்போது நைஜீரிய வாலிபரிடம் இருந்து கோகைன் போதை மருந்து பெற்றவர்கள் யார்? யார்? இதன் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள் ளது? என்பவை குறித்த விவரம் தெரிய வரும்.
Average Rating