கர்நாடகாவில் ஆற்றில் குளித்ததை படம் எடுத்த வாலிபரை அடித்து உதைத்த மாணவிகள்: கிராமமக்கள் பாராட்டு!!
பெங்களூரைச் சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்துக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை ஒரு வாலிபர் மரத்தில் மறைந்து இருந்து தனது செல்போனில ஆபாச கோணத்தில் படம் எடுத்தார்.
இந்த நிலையில் ஒரு மாணவி ஒரு மரத்தின் மறைவிடத்தில் உடை மாற்றினார். இதனையும் அந்த வாலிபர் படம் எடுத்தார். இதனை அந்த மாணவி பார்த்துவிட்டார்.
உடனடியாக அவர் கூச்சல் போட்டார். அதிர்ச்சியில் மற்ற மாணவிகள் அங்கு திரண்டனர். கிராம மக்கள் உதவியுடன் ஆபாச படம் எடுத்த வாலிபரை சுற்றி வளைத்து தாக்கி, செருப்பால் அடித்து உதைத்தனர்.
உடை மாற்றிய பெண் தனது கை வலிக்க அந்த வாலிபரை செருப்பால் அடித்து துவைத்து எடுத்தார்.
பின்னர் அந்த வாலிபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மாண்டியூர் மேலாபுறா கிராமத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயரை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
மாணவிகளின் துணிச்சலை கிராம மக்கள் பாராட்டினர். வாலிபரை அடிக்கும் காட்சியை சிலர் ‘வாட்ஸ்அப்’பில் வெளியிட்டு மாணவிகளின் துணிச்சலை பாராட்டினர்.
Average Rating