கற்பழிப்பு குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட வேண்டும்: பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ பேச்சு!!
Read Time:51 Second
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த பெண்கள் தின நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் துணைத்தலைவரும் இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.யுமான உஷாதாகூர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு இடையே அவர் நிருபர்களிடம் கூறுகையில் ‘பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் பயங்கர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். பெண்களை கற்பழிக்கும் குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட வேண்டும். மேலும் அவர்களது உடலுக்கு இறுதிச்சடங்கும் செய்யக்கூடாது’ என்றார்.
Average Rating