ரேணிகுண்டாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருத்தணி பெண் உள்பட 2 பேர் கைது!!

Read Time:1 Minute, 16 Second

3bc02d46-13e9-49d5-893f-29ec7524b8dc_S_secvpfரேணிகுண்டா ரெயில் நிலையம் அருகில் ரேணிகுண்டா போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் திருத்தணி தாலுக்கா நல்லூத்தூர் கிராமத்தை சேர்ந்த சுஜாதா (28), ரவி (52) ஆகியோர் என்பதும், ரேணிகுண்டா பகுதியில் தொடர்ந்து வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

மேலும் கடந்த மாதம் 21ந் தேதி ரேணிகுண்டா மார்க்கெட்டில் வியாபாரி ஆதிலெட்சுமி (28) என்பவரிடம் இருந்து 24 கிராம் மதிப்புள்ள செயினை பறித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழக்கு மாகாண சபையில், புதிய சம்பந்திகள்! – ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)!!
Next post ஒரே வருடத்தில் 108 பாதுகாப்பு அதிகாரிகள் தற்கொலை: பாராளுமன்றத்தில் அதிர்ச்சித்தகவல்!!