மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு சாலையில் கிடந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி!!
உத்திர பிரதேச மாநிலத்தில் மர்ம உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த 2 வாலிபர்களை கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மீரட் நகரின், பஞ்சாலி பவுல்ட்ரி பண்ணைக்கு அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த கிராம மக்கள் சிலர் சாலையில் ரத்த வெள்ளத்தில் 2 வாலிபர்கள் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சுயநினைவற்றுக் கிடந்த அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சைக்குப் பின்னர் நடத்திய விசாரணையின் போது, சபிர், ப்ரதிப் என்ற அந்த 2 வாலிபர்களும் நீலம் என்கிற அரவாணியிடம் வேலை செய்வதாகவும், திங்கள் அன்று, காலையில் நீலம் கொடுத்த டீயைக் குடித்த பிறகு இப்படி ஆனதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீலத்தைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating