ஒரே பிரசவத்தில் பிறந்து- ஒரே நாளில் திருமணம் செய்து அசத்திய மூன்று சகோதரிகள்!!

Read Time:1 Minute, 42 Second

bdfbd830-1a64-4430-9bf7-47cb9c7d68f8_S_secvpfஒரே பிரசவத்தில் பிறந்த மும்மை பிறவிகளான 3 சகோதரிகள் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரே நாளில், ஒரே மேடையில் தங்கள் மணமகன்களை கரம் பிடித்து இந்த திருமண(ங்களுக்கு)த்துக்கு வந்த விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

தெற்கு பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தை சேர்ந்த பெட்ரோ என்பவரின் மனைவிக்கு கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூவருக்கும் ரபேலா, ரோச்சேலி, டாகியேன் பினி என பெயர் சூட்டிய அந்த தம்பதியர் மகள்களை மிகவும் கவனமாக வளர்த்து வந்தனர்.

சிறுமிகளாக இருக்கும்போதே அவர்கள் மூவரும் ஒரு சபதம் ஏற்றுக் கொண்டனர். நாம் மூன்று பேரும் ஒரே நாளில் ஒரே மண மேடையில் திருமணம் செய்து கொள்வது என அந்த அபூர்வ சகோதரிகள் தீர்மானித்தனர்.

அதன்படி, கடந்த 27-ம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் முகச்சாயலில் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த மூன்று சகோதரிகளும், ஒரே வகையான உடையலங்காரம், சிகை அலங்காரத்துடன் தங்களது கணவர்களுடன் மோதிரம் மாற்றி, முத்தமிட்டு மகிழ்ந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்!!
Next post 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 7-ம் வகுப்பு மாணவன்!!